india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுதில்லி
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 53ஆவது ஆலோசனைக் கூட்டம் தில்லியில் சனியன்று நடைபெற்றது. அனை த்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதி யமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்திற்கு தலைமையேற்ற ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கை தொடர்பாக மாநில அரசுகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். மாநில நிதியமைச்சர்களின் கருத்துக்களுக்கு பின் நிர்மலா சீதாராமன் தனது அறி விப்பில்,”மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வுத்  தொகை, ஜிஎஸ்டி நிவாரணத் தொகை யில் விடுபட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றை ஒன்றிய அரசு உரிய நேரத் தில் விடுவிக்கும். மாநிலங்களுக்கு முத லீடுகளுக்கான சிறப்பு உதவித் திட்டத் தின் கீழ் ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்” எனக் கூறினார்.

புதுதில்லி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ. 1 கோடி அபராதம் 
தப்பிக்க வழி தேடும் மோடி அரசு!

மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் (யு.பி.எஸ்.சி.), பணியா ளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), ரயில்வே, தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்டவை நடத்தும் தேர்வு களில் முறைகேடுகளை தடுக்க அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு மசோதா 2024-ஐ கடந்த பிப்ரவரி மாதம் நடை பெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றியது. எனினும், இதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தற்போது முறைகேடுகளால் நெட் தேர்வு ரத்து, நீட் தேர்வு முறைகேடு என அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடிக ளால், மோடி அரசு வசமாக மாட்டிக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளது. இதனால், தப்பிக்கும் வழிதேடிய மோடி அரசு பிப்ரவரி மாதம் நிறைவேற்றிய மசோ தாவிற்குள் அடைக்கலம் புகுந்துள்ளது.

இந்த மசோதா குடியரசுத் தலைவ ரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், அவர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தற்போது இந்த சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது.

இதன்படி தேர்வுகளில் முறைகேடு களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு கள் வரை சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி எந்த ஒரு நபரும் தேர்வு வினாத் தாளை கசிய விட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு வினாத் தாள் கசிய விடப்படு வது குறித்து அறிந்தும், புகார் அளிக்காத தேர்வு சேவை வல்லுனர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய தேர்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாத படி இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப் பட்டுள்ளது. 

7 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவும் அமைப்பு

நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பை யடுத்து, நீட் தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை ஒன்றியக் கல்வி அமைச்சகம் சனிக்கிழமையன்று அமைத்துள்ளது.

சென்னை ஐஐடி பேராசிரியர் ராம மூர்த்தி, தில்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்கு நர் ரன்தீப் குலேரியா, ஒன்றிய அரசின் கல்வித்துறை இணை செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வதோதரா
போதை மாபியா மையமாக குஜராத் கடற்கரை

மோடி பிரதமர் ஆன பின்பும் நாட்டின் முக்கிய துறை முகங்கள் அனைத்தும், மோடியின் நெருங்கிய நண்பரான அதானி கைக்கு தாரை வார்க் கப்பட்டது. அதானி கையில் இருக்கும் துறைமுகங்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் ஜோராக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி யின் சொந்த மாநிலமான குஜராத், போதை மாபியா மையமாக உள்ளது. 

கட்ச் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) பறிமுதல் செய்வது தொடர் கதையாக உள்ள நிலையில், கடந்த 3 மாதத்தில் குஜராத் கடற்கரையில் ரூ.8,000 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 20 அன்று குஜராத்தின் சர்க்ரீக் பகுதியில் 120 மூட்டைகள் கொண்ட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்ட நிலையில், போதை மாபியா மையமாக குஜராத் கடற்கரை மாறியுள்ளது.

மூடி மறைக்கப்படும் செய்திகள்

குஜராத் மாநிலத்தின் கட்ச் கடற் கரையில் தினமும் 10 முதல் 20 மூட்டை  போதைப்பொருள் மூட்டைகள் கைப் பற்றப்படுவதாக பிஎஸ்எப் மூத்த அதிகாரி  ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக செய்திகள் நாள்தோறும் வெளியாகாமல் இருப்பது கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப் ப்பிடத்தக்கது.

பெங்களூரு
கேரளா, கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை எல்லையில் உள்ள தமிழ்நாடு மாவட்டங்களில் கன மழை மிரட்டி வரு கிறது. இதில் கேரள மாநிலம் மிக மோச மான பாதிப்பை எதிர் கொண்டு வரும் நிலை யில், கேரளாவைப் போல கர்நாடகா விலும் கனமழை தீவிர மடைந்துள்ளது. 

இந்நிலையில், கர்நாடகாவில் சனி யன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கும், கேரளாவில் சனியன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் அடுத்த சில நாட்களுக்கு தீவிர கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத் துள்ளது இந்திய வானிலை மையம்.

பாட்னா
பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத் தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த நாளி லிருந்து பாலியல் வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஊழல், வினாத்தாள் கசிவு என பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர். இந் நிலையில்,  கடந்த செவ்வாயன்று பீகாரின் அராரியா வில் ஓடும் பத்ரா ஆற்றின் குறுக்கே, அதாவது சிக்டி பிளாக் - பத்ரியா காட் இடையே  ரூ.12  கோடி செலவில்  கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திறப்புவிழா காணாமலேயே இடிந்து விழுந்தது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், சனி யன்று சிவான் மாவட்டத்தின் மக ராஜ்கஞ்ச் தொகுதியின் படேதா கிராமத் தின் கால்வாயின் நடுவில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களுட னான தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ள நிலையில், பாலம் கட்டும் பணி யில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப் பட்டதாகவும், ஊழல் மற்றும் ஒப்பந்ததா ரர்களின் அலட்சியத்தால் பாலம் இடிந்து விழுந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.