பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வரும் நிலையில், முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலை யில், ஞாயிறன்று மாநிலத்தின் கேபி னட் அமைச்சர்களான பால்கவுர் சிங், சேத் தன் சிங், பிரம்மசங்கர் ஜிம்பா, அன்மோல் ககன் மான் ஆகியோர் திடீ ரென தங்களது பதவி களை ராஜினாமா செய்தனர். பல்வேறு புகார்கள் எழுந்ததன் காரணமாகவே 4 பேரும் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ராஜினாமா செய்த அமைச்சர்களுக்கு பதிலாக தரன்பிரீத் சிங் சோந்த், மொகிந்திர பகத், ஹர்தீப் சிங், பரிந்திர கோயல், ரவ்ஜோத் ஆகிய 5 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூடுதல் செய்திகள் வெளியாகியுள்ளன. முன்ன தாக கடந்த ஆண்டு நவம்பரிலும் பஞ்சாப் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.