ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் தில்லியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த மதுபான கொள்கை யின் படி தில்லி மாநிலம் 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதில் 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை வளையத்தில் ஆம் ஆத்மி
ஆனால் இந்த மதுபானக் கொள்கையில் இருந்த வரிக்குறைப்பு போன்ற முக்கிய சலுகை கள் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலை யில், இந்த விவகாரம் குறித்து துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். தில்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், சட்டவிரோதமாக பணப்பரி மாற்றங்கள் மூலம் கிடைத்த பணத்தை தேர்த லுக்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக சிபிஐ அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து அம லாக்கத்துறையும் இந்த வழக்கை கையில் எடுத்த நிலையில்,பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை தொடுத்து வந்த தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோ டியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கெஜ்ரிவால் புறக்கணிப்பு
இதே மதுபான கொள்கை வழக்கு தொடர் பாக கடந்த நவம்பர் மாதம் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர விந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அனுப்பியது. தொடர்ந்து 5 மாநில தேர்தல் நேரத்தில் அவரது பிரச்சாரத்தை சிதைக்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மீண்டும் சம் மன் அனுப்பியது. ஆனால் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் இருப்பதால் ஆஜராக முடியாது என அதிரடியாக அறிவித்த நிலையில், ஜனவரி 3-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அம லாக்கத்துறை 3-ஆவது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில், இந்த சம்மன் தொடர் பாக கெஜ்ரிவால் எவ்வித விளக்கம் அளிக்கா மல், சம்மனையும் புறக்கணித்தார்.
சிறையில் அடைக்க பாஜக துடிக்கிறது
3-ஆவது முறை சம்மன் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில்,”இரண்டு வருடங்க ளாக மதுபான ஊழல் வழக்கின் பெயரில் விசா ரணை நடத்தி வருகிறார்கள். அப்போதெல்லாம் சம்மன் அனுப்பாமல், தேர்தல் நெருங்கும் வேளையில் சம்மன் அனுப்பப்படுவதன் நோக் கம் என்ன? மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபடுவதை தடுக்கும் பாஜகவின் நோக் கம் மட்டுமே இதில் வெளிப்பட்டுள்ளது. என்னு டைய நேர்மைதான் எனக்கு பெரிய பலம். சட்டப்பூர்வமாக எனக்கு சம்மன் அனுப்பப்பட் டால் நான் ஒத்துழைப்பேன். ஆனால் பாஜக விடம் என்னை விசாரிப்பதற்கு எதுவும் இல்லை. பெரும் ஊழல் என்று கூறும் பொழுது 2 வருட தீவிர விசாரணையில் ஈடுபட்டும் ஒரு பைசா வைக் கூட கைப்பற்றாதது ஏன்? அவர்கள் குறிப்பிடும் ஊழல் தொகை மொத்தமும் காற் றில் கரைந்து விட்டதா? ஊழல் நடந்திருந்தால் தான் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் இதுவரை எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை. சம்மன் மற்றும் கைது நட வடிக்கை மட்டுமே அரங்கேறுகிறது. அரசியல் காரணங்களுக்காக செயல்படும் மத்திய விசா ரணை அமைப்புகளால் என்ன செய்ய முடி யும்? விசாரணை என்ற பெயரில் ஆம் ஆத்மி யின் பல தலைவர்களை கைது செய்து சிறை யில் அடைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எதிராக ஆதாரம் எதையும் அவர்கள் சமர்ப்பிக்க வில்லை. கைது வரிசையில் இப்போது என்னை யும் சிறையில் அடைக்கத் துடிக்கிறார்கள். இந்த கைதுகளுக்கு அப்பால் இவர்களால் துரும்பை யும் நகர்த்த முடியாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
4-ஆவது முறையாக சம்மன்?
3-ஆவது முறையாக சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், கெஜ்ரி வால் வீட்டில் வியாழனன்று சோதனை நடத்தி அதன்பின் கைது நடவடிக்கையை அரங்கேற்ற தயார் நிலையில் அமலாக்கத்துறை இருப்ப தாக, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி அமைச்ச ருமான அதிஷீ கூறிய நிலையில், வியாழனன்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வியாழனன்று இரவு 7 மணி வரை எவ்வித கைது நடவடிக்கையும் அமலாக்கத்துறையால் அரங் கேறாத நிலையில், அமலாக்கத்துறை கெஜ்ரி வாலுக்கு 4-ஆவது முறையாக சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.