நிபா பாதிப்பு பட்டியலில் 350 பேர்
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், 2 நாட்களுக்கு முன் மலப்புரத் தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் உயிரிழந் தான். இதனால் கோழிக்கோடு பிராந்தி யத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த 14 வயது சிறுவனிடம் தொடர்பில் இருந்த 13 பேரின் உமிழ்நீர் திங்களன்று பரிசோதிக்கப் பட்டது. இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 4 பேர் பெருந்தல்மண்ணாவில் உள்ள மருத்துவமனையில் சிறுவனிடம் தொடர்பு கொண்டவர்கள் ஆவர். அதே போல கோழிக்கோட்டில் இருந்து பரி சோதிக்கப்பட்ட 9 பேரில் சிறுவனின் பெற் றோரும் அடங்குவர். எனினும் அந்த 13 பேரிடம் நிபா வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலக்காடு பழங்குடியினரின் உமிழ்நீரும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு முதல் நாள் சிறுவன் டியூஷன் சென்டருக்கு சென்ற பேருந்தும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதில் இருந்த பயணிகளும் கண்காணிப்புப் பட்டியலில் உள்ளனர். இவ்வாறு மாநிலம் முழுவதும் 350 பேர் தொடர்புப் பட்டியலில் உள்ளனர். இதில் 68 பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்ற நிலையில், அதில் 101 பேர் நோய் பாதிப்பு ஏற்படும் அதிக ஆபத்து பிரிவில் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கோழிக்கோட்டில் ஐசிஎம்ஆர் குழு...
கடந்த ஆண்டைப் போலவே நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை மேற் கொண்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) குழு கோழிக்கோடு வந்த டைந்துள்ளது. ஐசிஎம்ஆர் குழு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்ய உள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவன (என்ஐவி) குழு வும் கேரள மாநிலத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு எல்லையில் சோதனை தீவிரம்
மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அனைத்து சோதனை சாவடிகளிலும் தமிழ்நாடு அரசு தீவிர சோதனையை துவங்கி யுள்ளது. வாகனப் பயணிகளின் உடல்நிலையைப் பரிசோதித்த பிறகே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப் படுகிறது. காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடல்நிலையை கண்டறிந்த பிறகே எல்லை அனுமதி உத்தரவு அளிக்கப்படும்.