பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) உட்பட 35க்கும் மேற்பட்ட அமைப்புகள் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்து வழக்குகளையும் சிபிஐ நேர்மையாகவும், துரிதமாகவும் விசாரிக்க வேண்டும்; குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.