புதுதில்லி தில்லியில் விட்டு விட்டு கன மழை பெய்து வரும் நிலை யில், பழைய ராஜிந்தர் நகரின் பல பகுதிகள் வெள்ளத் தில் மிதந்து வருகிறது. அதே பகுதியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீர் தேங்கிய நிலை யில், முதல் தளத்தில் இருந்து வெளியே வர முடியாமல் 20 மாண வர்கள் சிக்கிக்கொண்டனர். எவ்வித உதவியுமின்றி 17 மாண வர்கள் பயிற்சி மையத்தை விட்டு வெளியே வந்த நிலையில், 2 மாணவிகள் உட்பட 3 மாண வர்கள் வெளியே வரவில்லை. தீயணைப்பு வீரர்களின் பல மணிநேர தேடுதலுக்கு பின்னர் 3 மாணவர்களும் சடலங்களாக ஞாயிறன்று மீட்கப்பட்டனர்.
வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்...
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங் கானாவை சேர்ந்த தன்யா சோனி, கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த நிவின் டால்வின் என உயிரிழந்த 3 மாணவர்களும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த வர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
தில்லியில் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட உத்தரவு
3 மாணவர்களின் உயிரிழப்பு க்கு அரசே பொறுப்பேற்க வேண்டுமென தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற மற்ற மாணவர்கள் ஆவேசமாக கோஷ மிட்டனர். மேலும் மோடி மற்றும் தில்லி அரசு சார்பில் சம்பவ இடத்திற்கு வந்து யாரும் பார்வை யிடவில்லை என பயிற்சி மையத்திற்கு வெளியே மாண வர்கள் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். போராட்டத்திற்கு பிறகு தில்லி அமைச்சர் அதிஷி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தில்லியில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களை யும் மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.