india

img

மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்ததில் 3 பேர் பலி

மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள தண்டல் தெருவில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்று, இன்று காலை 11.40 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து, போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 9 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

;