india

img

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் தற்போது 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்த நிலையில், இந்தியாவில் தில்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்,  ராஜஸ்தானில் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு உறுதி செய்தது. இதை அடுத்து, தில்லியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் உடன் தொடர்பில் இருந்த ஆக்ராவை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, தில்லியில் இருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த 21 பேரில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இத்தாலியர்களை ஏற்றி சென்ற ஓட்டுனருக்கும், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

;