கடந்த ஒன்பது ஆண்டுகளில் 24.8 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு விட்டார் கள் என்று நிதி ஆயோக், கூசாமல் ஒரு அப் பட்டமான பொய்யினை கட்டவிழ்த்து விட்டுள்ளது. நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை மிகப் பெரிய மோசடியே ஆகும். நரேந்திர மோடி ஆட்சியதிகாரத்திற்கு வந்தது முதலே நுகர்வோர் செலவினம் தொடர்பான ஆய்வு மேற் கொள்வதை ஒன்றிய அரசு முற்றாக நிறுத்தி விட்டது.
அரசுத் தரப்பில் அப்படி ஒரு ஆய்வே இல்லாத போது, தற்போது மோடியின் ஊதுகுழல்கள், சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து தங்களை ஆட்சி மீட்டுவிட்டதாக திட்டமிட்டு ஒரு பொய் வலையை கட்டமைத்து வரு கின்றன. உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதே சம் உள்ளிட்ட இந்தியாவின் மிகமிக வறுமையான மக்கள் அதிகமுள்ள மாநிலங்களில் எந்த முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது என்ற விபரம் ஏதுமில்லாமல் நிதி ஆயோக் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.