சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் சுமார் 25,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள் ளது தெரியவந்துள் ளது.
நாடு முழுவதும் உள்ள போலி நிறுவ னங்களுக்கு எதி ராக ஜிஎஸ்டி அதிகாரி கள் சோதனை மேற்கொண்டு வருகின்ற னர். இந்த சோதனையில் எந்த வர்த்தகத்தி லும் ஈடுபடாமல் உள்ளீட்டு வரி திரும்பப் பெறுதலுக்காக மட்டுமே 73,000 நிறு வனங்கள் உருவாக்கப்பட்டதை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனர். இவற்றில் சுமார் 18,000 நிறுவனங்கள் போலி என்பது தெரிய வந்தது. மேலும் அந்நிறுவனங் கள் சுமார் ரூ.24,550 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த சிறப்பு நடவடிக்கையின்போது நிறுவனங்கள் ரூ.70 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்தின என்று ஒன்றிய நிதியமைச் சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள் ளன.