india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டில் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பை  முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலணி பகுதியில் மழையால் மூன்று மாடி  கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர். ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சர்ச்சை அடங்குவதற்குள், கொல்கத்தாவில் உள்ள மற்றொரு அரசு மருத்துவமனையில் 26 வயது மிக்க பெண் ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது  குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்து, இரவில்  குழந்தையின் அருகே படுத்திருந்தார். அப்பொ ழுது அங்கு வார்டு காவலராக பணியாற்றி வரும்  தனய் பால் (26) என்பவர்  பெண்ணிற்கு பாலியல்  தொல்லை கொடுத்துள்ளார்.

காசர்கோடு
கேரளத்தில் துயரம் ரயில் மோதி 3 பெண்கள் பலி

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் காஞ்சங்காடு அருகே உள்ள கல்லார் பகு திக்கு திருமணத்திற்காக 52 பேர் கோட்ட யத்தில் இருந்து ரயிலில் வந்தனர்.திரு மணம் முடிந்த பிறகு சனியன்று இரவு  மங்களூரு - திருவனந்தபுரம் மலபார்  எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோட்ட யத்திற்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். ரயில் ஏறுவதற்காக 2ஆவது பிளாட்பாரத்தில் இருந்து தண்ட வாளத்தை கடந்து முதல் பிளாட்பா ரத்திற்கு சென்று கொண்டு இருந்த பொழுது, கோவையிலிருந்து ஹிசார் நோக்கிச் சென்ற  எக்ஸ்பிரஸ் ரயில் அவர்  கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில்  சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மா  உதுப்பாய் (72), ஆலிஸ் தாமஸ் (61), ஏஞ்ச லினா ஆபிரகாம் (30) ஆகிய 3 பெண்கள்  உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 

கோவை எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணூ ருக்கு அடுத்து மங்களூரு ரயில் நிலை யத்தில் தான் நிற்கும் என்பதால், இறந்த வர்களின் சில உடல் பாகங்கள் மட்டுமே  மீட்கப்பட்டு, காசர்கோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சங்காடு  ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.