ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் தகவல்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் ஆதார் - பான் எண்கள் இணைப்பு குறித்த விவரங்களை கேட்டு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு RTI மூலம் பதிலளித்த ஒன்றிய நேரடி வரிகள் வாரியம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பான் கார்டு வைத்திருப்பவர்கள் சுமார் 70.24 கோடி பேர்களில் 57.25 கோடி பேர் பான் கார்டுகளை ஆதாருடன் இணைத்துள்ளனர்.
பான் கார்டை மீண்டும் செயல்படுத்த, ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று CBDT (Central Board of Direct Taxes) ஒன்றிய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.