india

img

புல்புல் புயலில் சிக்கி 7 பேர் பலி

இந்தியாவில், புல்புல் புயலால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ‘புல்புல்’ புயலாக மாறியது. புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம் நாட்டை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில், கரையை கடந்தது.  அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்நிலையில், புயலால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் 7 பேரும், வங்க தேசத்தில் 4 பேரும் உயிரிழந்தனர். 

;