இந்திய கடற்படையில் காலியாக உள்ள செய்லர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் விவரம்:
பணி: செய்லர் (Sailor)
காலியிடங்கள்: 350
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 வாரம் பயிற்சி வழங்கப்படும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.14,600 வழங்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.60 இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2021
மேலும் விவரங்கள் அறிய : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_7_2122b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.