அத்வானிக்கு ‘பாரத ரத்னா’
புதுதில்லி, பிப்.3- பாபர் மசூதி இடிப்பு கர சேவைக்கு ரதயாத்திரை மூலம் ஆள்திரட்டியவரும், வாஜ்பாய் ஆட்சியில் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர் பதவிகளை வகித் தவருமான 96 வயது பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
“பொதுவாழ்வில் அத் வானியின் பல ஆண்டுகால சேவையானது, அரசியல் நெறிமுறைகளில் ஒரு முன்மாதிரியாக அமைந் தது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது எனக்கு மிகவும் உணர்ச்சி கரமான தருணம்” என்று பிர தமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தாக்குதல்; 18 பேர் பலி!
புதுதில்லி, பிப்.3- இராக், சிரியாவில் ஈரான் ஆதரவு ஆயுதப் படைகள் மற்றும் தெஹ்ரான் ஆதரவு போராளிக் குழுக்கள் மீது, வெள்ளியன்று அமெரிக்கா விமானத் தாக்குதல்களை நடத்தியது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகள் 18 பேர் கொல் லப்பட்டதை சிரிய மனித உரி மைகள் போர் கண்காணிப்ப கம் உறுதிப்படுத்தியுள்ளது.