இன்று உலக தொழுநோய் தினமாக உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி கடைசி ஞாயிறு தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டாலும் இந்தியாவில் காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30 அன்று உலக தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொழுநோய் இல்லாத இந்தியா காந்தியடிகளின் கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.