நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை,இன்று காலை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து 2022 -23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிதியமைச்சர் உரையாற்றுகிறார்.