india

img

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து ஆய்வுகள் மூலமே முடிவு செய்ய முடியும் - ஒன்றிய அரசு

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து ஆய்வுகள் மூலமே முடிவு செய்ய முடியும் - ஒன்றிய அரசு

இந்தியாவில் கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் எனும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து தற்போது வரை விவாதிக்கவில்லை எனத் தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் அரோரா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே. அரோரா கூறியதாவது. கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் தான் பூஸ்டர் டோஸ் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இது வரை பூஸ்டர் டோஸ் பற்றி விவாதிக்கவே இல்லை. தடுப்பூசி பெற்ற பின்னர் தனிநபருக்கு பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகிறது. தடுப்பூசி  போட்டுக்கொண்டுள்ள தனி நபர்கள் இடையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பின்பற்றப்பட வேண்டுமா என்பதை ஆய்வுகள் மட்டுமே வழி நடத்தும் எனத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அந்தநாட்டின் எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. பைசர்-பயோ என்டெக், மாடர்னா தடுப்பூசிகளின் மூன்றாவது டோசுக்கு பூஸ்டர் டோஸ் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்தியாவில்  கோவிஷீல்டு  தடுப்பூசியைத் தயாரித்து வழங்கும் இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ்பூனவாலா, தடுப்பூசியால் பெறப்படுகிற நோய் எதிர்ப்புச்சக்தி 6 மாதத்தில் போய் விடும் என்பதால் மூன்றாது டோஸ் தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தாக்கது. 

;