90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் செவ்வா யன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடை பெற்றது. முதல் சுற்றில் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி 70 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்தது. அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. கிட்டத்தட்ட 2 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு திடீ ரென பாஜக முன்னிலை வகித்தது. 3ஆவது சுற்றுக்கு மேல், முதல் சுற்றில் 15 தொகுதிகளில் முன்னி லையில் இருந்த பாஜக 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை யும், முதல் சுற்றில் 70 தொகுதி களுக்கு மேல் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் 30 தொகுதி களில் மட்டுமே முன்னிலையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டது.
அதன்பிறகு மாலை 5 மணி நில வரப்படி பாஜக 49 தொகுதிகளில் (29 வெற்றி, 20 முன்னிலை) முன்னி லையில் இருப்பதாகவும், காங்கி ரஸ் 36 தொகுதிகளில் (28 வெற்றி, 6 முன்னிலை) முன்னிலையில் இருப்பதாகவும், இருகட்சிகளும் முன்னிலையில் உள்ள பெரும் பாலான தொகுதிகளில் 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் இருப்பதாக தேர்தல் ஆணைய தரவுகளில் தகவல் வெளியானது. 70 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி எப்படி 40 தொகுதிகளுக்குள் சுருண்டது என பல்வேறு சர்ச்சை கேள்விகள் கிளம்பியுள்ளன.
வாரணாசி போல..
18ஆவது மக்களவை தேர்த லில் வாரணாசி தொகுதியில் பிரத மர் மோடி மீண்டும் போட்டியிட்டார். முதல் 3 சுற்றுகளில் முன்னிலை யில் இருந்த மோடி அடுத்த 4 சுற்று களில் பின்தங்கிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை பெற்றார். ஆனால் மோடி பின்தங்கியவுடன் 4,5,6,7 ஆகிய சுற்றுகளின் வாக்கு எண் ணிக்கை முடிவு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 8ஆவது சுற்றில் வார ணாசி தொகுதியின் வாக்கு எண் ணிக்கை முடிவு தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப் பட்டது. அதில் மோடி 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னி லையில் இருந்தார். தொடர்ந்து அனைத்து சுற்றிலும் முன்னிலை யில் இருந்த மோடி 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மோடியின் வாரணாசி வாக்கு எண்ணிக்கை போல ஹரி யானா சட்டமன்ற தேர்தல் முடிவு களும் வெளியாகியுள்ளது சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.