india

‘மாற்று மொழி இந்தி’ என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு

புதுதில்லி, ஏப்.10-  இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழி இந்தி மொழியே என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு  அரசி யல் கட்சித்  தலைவர்களும் பல்வேறு மாநில மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தில்லியில் நாடாளுமன்ற மொழி அலு வலக குழு கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில்  அமித்ஷா பேசு கையில், ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி அமைய வேண்டும் என்றும் வெவ் வேறு மாநில மக்களும் பேசிக்கொள்ளும் மொழியாக இந்தி மொழியாகவே இருக்க  வேண்டும்.  தற்போது ஒன்றிய அமைச்சரவை யில் 70 சதவீத அலுவல்கள் இந்தியிலேயே நடைபெறுகிறது. அலுவல் மொழியிலேயே அரசை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருப்பது இந்தியின் முக்கியத்து வத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சு இந்தி மொழி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சர்ச்சையையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முன்னாள் முதல் வர் சித்தராமையா மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.  அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் மாநில மொழியை முன்னிறுத்தி யும் சமூகவலைத்தளங்களில் கருத்துக் கள் பதிவிடப்பட்டு வருகின்றன. சமூக  வலைத்தளங்களில் #இந்திதெரியாது போடா, #NationalLanguage #Tamil உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இணை யத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ,பெட்ரோல்,டீசல்,சமையல் எரி வாயு விலையை இதுவரை இல்லாத அள விற்கு உயர்த்தி நாட்டு மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மக்கள் மற்றும் அரசியல் கட்சி யினர் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். மக்கள் பாதிப்பு பிரச்சனை முன்னுக்கு வந்து,போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும் போது, அதனை திசைதிருப்ப இந்தி மொழி, மதம், மாநில உரிமை பறிப்பு சம்பந்தமாக சர்ச்சையாக பேசுவது ஒன்றிய பாஜக அரசில் உள்ள அமைச்சர்களின் வாடிக்கையாக உள்ளது. இதனை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தியும் பதிவிட்டு வருகின்றனர்.