அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்ற வளாகத்தில் 7 அடி உயர டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.