பீகார் மாநிலத்தில் பாஜக - நிதிஷ் கட்சி ஆட்சியில் அமர்ந்த பின்பு சட்டம் ஒழுங்கு மிக மோசமான அள வில் சீர்குலைந்துள்ள நிலையில், குற்றச் சம் பவங்கள் இல்லாத நாட்களே இல்லாத சூழல் உள்ளது. கடந்த மாதம் மாவட்ட கவுன்சிலர் உட்பட 10க்கும் மேற்பட் டோர் சுட்டுக் கொல் லப்பட்ட நிலையில், திங்களன்று மாலை இடதுசாரி தலைவர் ஒருவர் மர்ம நபர்க ளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அர்வால் மாவட்டம் கிஞ்சார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சக்கன் பிகா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் சந்திர வன்ஷி. இவர் இடதுசாரி கட்சியான சிபிஐ (எம்-எல்) கட்சியின் உள்ளூர் தலைவராக இருந்தார். சுனில் சந்திரவன்ஷி திங்களன்று மாலை சந்தைக்கு சென்று திரும்பும் வழி யில் இருசக்கர வாகனத்தில் வந்த அடை யாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுனில் சந்திர வன்ஷியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து கிஞ்சார் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் எந்த காரணத்தி னால் நிகழ்ந்தது என்பதை போலீசார் தெரி விக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.