வாகனம் ஓட்டும் போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
தில்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 5,100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 17 பேர் பலியாகியுள்ளனர்.
இது நவம்பர் 2020 க்குப் பிறகு தில்லியில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
இந்நிலையில், ஒரு காரில் தனியாக பயணம் செய்யும் போது முக கவசம் அணிவது கட்டாயமாகும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.