இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு நெறிமுறைகளை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசின் ஆல்பா, பீட்டா மற்றும் காமா ஆகிய உருமாறிகளுக்கு எதிராக இந்தியாவில் செலுத்தப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.