india

img

புதிய வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரிட்டனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்... எய்ம்ஸ் இயக்குநர் அறிவுறுத்தல்....

புதுதில்லி:
‘டெல்டா பிளஸ்’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கபிரிட்டனிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை யின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  தனியார் தொலைக் காட்சிக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது: 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் போது டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாடு மாதக் கணக்கில் ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்கிறது. பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு ஏதாவது ஒரு புதியவகை கொரோனா வைரஸ் கண்டறியப் பட்டால் உடனடியாக ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.18 வயதுக்கு மேற்பட்டோரில் 81 சதவீதம்பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும்  59 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக பிரிட்டன் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இதனால் அந்நாட்டில் டெல்டா வகை வைரஸ் பரவல்கட்டுக்குள் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் பிரிட்டனிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகியுள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியைஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களையும் புதிய வைரஸ் எளிதில் தொற்றக் கூடும்.ஒருவேளை கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டால் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை மீண்டும் சந்திக்க நேரிடும்.இந்த இக்கட்டான நேரத்தில் கொரோனா வைரஸ் மரபணு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் எந்தளவுக்கு பலன் அளிக்கிறது. மோனோகுளோனல் ஆன்டிபாடி சிகிச்சை பலன் அளிக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வககட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அச்சுறுத்தல் இல்லை
டெல்டா பிளஸ் வைரஸ் கடந்த மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. இப்போதைக்கு இந்த வைரஸால் மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று ஒன்றிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகளும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

;