india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி தில்லி மாநிலசிங்கு எல்லையில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் கூடைப்பந்து வீரர் சத்னம் சிங் இணைந்துகொண்டார். 

                             ******************** 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா, ஆக்ரா, பிரோசாபாத் மற்றும் ஹத்ராசில் இருந்தும் மீரட், முசபர்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கிசான்சேனா அமைப்பை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள், வழக்கறிஞர்கள் , ஆதரவாளர்கள் ஆகியோர் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடைபெறும் போராட்டத்தில் சங்கமிக்க  தில்லியை நோக்கி அணிதிரண்டுள்ளனர்.

                             ******************** 

ஏழை மாணவர்கள் 4 பேருக்கு மருத்துவப்படிப்புக்கான இடங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

                             ******************** 

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெற இருந்த வருடாந்திர உச்சி மாநாடு ரத்து செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

                             ******************** 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு ஜனவரியில் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

;