நாகை மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சைபீரியா வழியாக வலசை போகும் அரிய வகை பறவையான அமூர் பால்கன் பறவை காணப்படுவது தெரிய வந்துள்ளது.
****************
புதுச்சேரி மருத்துவக் கல்லூரிககளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய அரசு,புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தர விட்டுள்ளது.
****************
ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமான வரிச்சோதனையில் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
****************
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு உள்ளிட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடு 2021 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
****************
சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்துள்ளது.
****************
ஏர் இந்தியா அங்கம் வகிக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பான ஸ்டார் அலையன்ஸின் புதிய செயற்குழு தலைவராக ஸ்காட் கிர்பி என்பவர்நியமிக்கப்பட்டுள்ளார்.
****************
தில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 22-வது நாளாக நடைபெறும் போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார். பதின்டா என்ற இடத்தைச் சேர்ந்த விவசாயிதில்லி எல்லையில் உயிரிழந்தார்.இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
****************
பாதுகாப்புக் காரணங்களுக்காக தடைசெய்யப் பட்ட பப்ஜி விளையாட்டை மீண்டும்அனுமதிப்பதற்கான ஒப்புதல் எதுவும் வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.