அரசு இல்லத்தை விட்டுக் கொடுத்த தேஜஸ்வி!
ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ். லாலு சிறைக்குச் சென் றதால், கட்சிப் பொறுப்பை ஏற்ற தேஜஸ்வி, தற் போது பீகார் எதிர்க் கட்சித் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், அவர் எதிர்க்கட்சித் தலைவர்என்ற வகையில் தனக்கு வழங்கப்பட் டுள்ள அரசு இல்லத்தை கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்காக விட்டுக் கொடுத்துள்ளார். இதுதொடர் பாக பீகார் அரசுக்கு முறைப்படி கடிதமும் எழுதியுள்ளார்.
*************
உ.பி.யில் கொரோனாவுக்கு பலியான 3 அமைச்சர்கள்!
உத்தரப் பிரதேசத் தில், கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, கமல் ராணி வருண், சேத்தன் சவுகான் ஆகிய மாநில அமைச்சர்கள் 2 பேர்பலியாகினர். இந்நிலையில், கொரோனா 2-ஆவது அலைக்கு, செவ்வாயன்று மாநில வருவாய் மற்றும்வெள்ளத்தடுப்பு அமைச்சர் விஜய் காஷ்யப் பலியாகியுள்ளார். இவர்கள் தவிர, தால் பகதூர் கோரி, கேசர் சிங்கங்வார், ரமேஷ் திவாகர், சுரேஷ் குமார்,ஸ்ரீவஸ்தவா ஆகிய 5 எம்எல்ஏ-க்களும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந் துள்ளனர்.
*************
கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம் சிறப்பு நிதி!
கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் நூறு சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் கிராமத்துக்கு தலா ரூ. 10 லட்சம் சிறப்பு மேம்பாட்டு நிதி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் அறிவித்துள்ளார். 4 ஆயிரத்துக்குமேற்பட்ட சிற்றூராட்சி தலைவர்களுடனான உரையாடலின் போது, அம்ரீந்தர்சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள் ளார்.
*************
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தி இருக்கிறோம்
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 60 ஆயிரத்தைத் தாண்டி, உச்சத்தில் இருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு தற்போது, 30 ஆயிரத்திற்கும் கீழ்26 ஆயிரமாக குறைந் துள்ளது. இதனைக் குறிப்பிட்டு, மகாராஷ்டிர மாநிலம் தனது தீவிர முயற்சியால் 2-ஆவது கொரோனா அலையைகட்டுப்படுத்தி உள்ளதாக ஆளும் சிவசேனா கட்சி, ‘சாம்னா’ பத்திரிகையில் பெருமிதம் தெரிவித்து உள்ளது.
*************
2-ஆவது இடத்திற்கு ‘முன்னேறிய’ கர்நாடகா
கொரோனா தொற் றால் அதிகமானோர் உயிரிழந்த மாநிலங்களின் பட்டியலில் 83 ஆயி ரத்து 777 பேர்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 21 ஆயிரத்து 846 பேர்களுடன் தில்லி 2-ஆவது இடத்திலும் இருந்தது. இந்நிலையில், கடந்த திங்களன்று 22 ஆயிரத்து 500 உயிரிழப்புகளுடன், தில்லியைப் பின்னுக்குத் தள்ளி, கர்நாடகம் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமையன்றும் 525 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.