india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

கோவிஷீல்டு தடுப்பூசி 2வதுடோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2வது டோஸ் தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            ************* 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் கலனில்ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு இஸ்ரோ வல்லுநர்கள் உதவியுடன் சரிசெய்யப் பட்டது.

                            ************* 

குஜராத் மாநிலத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை 65,805 இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள. ஆனால் அரசின் அதிகாரபூர்வ கொரோனா பலி 4,218 என அறிவித்தது ஏன்? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

                            ************* 

பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக அமராவதி அணையி லிருந்து தண்ணீர் திறந்துவிடப் பட்டது.

                            ************* 

தில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  

;