india

img

பள்ளிகளுக்குத் தனி கல்வி வாரியம்.... தில்லி முதல்வர் அறிவிப்பு....

புதுதில்லி;'
தில்லியில் அமைந்துள்ள 2,700 பள்ளிகளுக்காக தனி கல்வி வாரியம் அமைக்க தில்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் தற்போது ஆயிரம் அரசுப் பள்ளிகளும், 1,700 தனியார் பள்ளிகளும் உள்ளன. இவை அனைத்தும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தில்லியில் அமைந்துள்ள 2,700 பள்ளிகளுக்காக தில்லி கல்வி வாரியம் (டிபிஎஸ்இ) என தனி வாரியம் அமைப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொடக்கத்தில் 21 முதல் 22 அரசுப் பள்ளிகள் வரை இந்த வாரியத்தில் இணைக்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் மீதமுள்ள அனைத்து பள்ளிகளும் வாரியத்தின் கீழ் கொண்டுவரப்படும்.இந்த தனி கல்வி வாரியத்துக்குத் தில்லி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆட்சிமன்றக் குழு அமைக்கப்படும். மேலும் தலைமைச் செயல் அதிகாரி தலைமையில் செயற்குழு ஒன்றும் அமைத்துக் கண்காணிக்கப்படும்.மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான தரம், உயர் தொழில்நுட்ப முறைகள் கற்றுத் தருவதற்கு வசதியாக இந்த வாரியம் செயல்படும். மாணவர்களின் திறனுக்கேற்ப கல்வியை வழங்கக் கல்வி வாரியம் உதவியாக இருக்கும்.இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.
 

;