india

img

கொரோனாவால் பலியான 921 பேருக்கு  ரூ.50 லட்சம் காப்பீடு....

புதுதில்லி:
2020 ஆம் ஆண்டிலிருந்து கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என எத்தனை பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து பாதிக்கப்படும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

;