india

img

ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் உத்தரவு....

புதுதில்லி:
 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, நோயாளிகள் உயிரிழப்பதாக புகார்கள் எழுந்தன. இதை  தொடர்ந்து பிரதமர் மோடி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள உத்தரவில்,  நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனைத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களும், அதனை நிரப்பும் இடங்களும் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆக்ஸிஜன் உருளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

;