india

img

உ.பி.யில் தலித்துகள் மீது தொடரும் தாக்குதல்...

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாண்டா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கை-பம்பில்தண்ணீர் பிடித்தார் என்பதற்காக 45 வயதுள்ள தலித் ஒருவர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிசாந்தா காவல்நிலையத்தில் முதல்தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் படி, தாக்குதலுக்கு உள்ளான ராமச்சந்திரா ரைதாஸ், டெண்டுரா கிராமத்தில் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ள கை பம்பில் தண்ணீர் பிடித்தமைக்காக, தன்னை ராம்தயாள் யாதவ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தடியால் தாக்கினார்கள் என்று புகார் செய்திருக்கிறார். ரைதாஸ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். (ந.நி.)