india

img

முகக்கவசம் அணியாத  விமானப் பயணிகள் மீது நடவடிக்கை .....

புதுதில்லி:
முகக்கவசம் ஒழுங்காக அணியாத பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விமான நிலையத் திற்குள் நுழைவது முதல் வெளியேறுவது வரை கொரோனா தடுப்புவிதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்களை உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் .திரும்ப திரும்ப அறிவுறுத்தியும் முகக்கவசத்தை உரிய முறையில் விமானப் பயணி அணிய மறுத்தால், விமானத்தில் இருந்து இறக்கிவிட வேண்டும்.  கொரோனா தடுப்புவிதிகளை மீறினால் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;