india

img

உள்நாட்டு விமானச்சேவை அதிகரிப்பு..

புதுதில்லி:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால்  மார்ச் இறுதியில் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. பிறகு  மே 25 ஆம்தேதி முதல் மீண்டும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இதில் கொரோனா பரவலுக்கு முன் இயக்கப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கையில் 33 சதவீத விமானங்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.பின்னர் இந்த எண்ணிக்கை ஜூன் 26 அன்று 45 சதவீதமாகவும், செப்டம்பரில் 60 சதவீதமாகவும், நவம்பரில் 70 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக, மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது டிவிட்டரில்,கடந்த மே 25 ஆம் தேதி உள்நாட்டு விமானங்களில் பயணிக்க 30 ஆயிரம் பயணிகளுக்குஅனுமதி வழங்கப்பட்டது. அந்த எண்ணிக்கை, பின் 2.52 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை, 70 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

;