india

img

டெல்லியில் மீண்டும் கடுமையான வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு  

டெல்லியில் மீண்டும் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்துள்ளது.  

கடந்த மாதம் டெல்­லி­யின் சில பகு­தி­களில் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ்க்கு கீழே வெப்பநிலை பதிவாகி வந்தது.

இந்நிலையில் ஐந்து நாட்களில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் டெல்லியின் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை தொட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாகவோ அல்லது இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகும்போது வெப்ப அலை அறிவிக்கப்படுகிறது. மேலும் இயல்பான வெப்பநிலையிலிருந்து 6.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் கடுமையான வெப்ப அலை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

டெல்லியின் மிக அதிகபட்ச வெப்பநிலை என்றால் அது 1941, ஏப்ரல் 29 அன்று பதிவான 45.6 டிகிரி செல்சியஸ் ஆகும்.  

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் எட்டு வெப்ப அலை நாட்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.