தில்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள குடிசை பகுதிகள் பிற நாடுகளில் இருந்து வரும் தலைவர்களின் கண்ணில் படாதவாறு மறைக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஜி-20 கூட்டமைப்பின் 18-ஆவது உச்சி மாநாடு செப்டம்பர் 9,10 தேதிகளில் புது தில்லியில் நடைபெற உள்ளது.இம்மாநாட்டில் கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசுப்பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வர இருக்கின்றனர்.அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தில்லியில் உள்ள குடிசைப்பகுதிகள் பிற நாடிகளில் இருந்து வரும் தலைவர்களின் கண்ணில் படாதவாறு துணி மற்றும் பேனர் கட்டி மறைக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே, 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத்திற்கு வந்திருந்தபோது குடிசைப்பகுதிகள் துணி கட்டி மறைக்கப்பட்டிருந்தன.
உலக நாடுகளில் இருந்து தலைவர்கள் இந்தியா வரும் போதெல்லாம் பாஜகவினர் குடிசைப்பகுதிகளை துணி கட்டி மறைப்பதற்கு காட்டும் அக்கறையை அம்மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கு காட்டலாம் என்கிற குரல் எழுகிறது.