india

img

ஆணி, கம்பிகளை அகற்றிய விவசாயிகள்....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடக்கவும் காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் மீண்டும்அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையிலும் சாலைகளில் உயர்ந்த தடுப்புகளை அமைத்தும்,ஆணி, கம்பிகளை சாலையில் புதைத்தனர்.இந்நிலையில் பிப்ரவரி 4 அன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  காசிப்பூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்கச் சென்றனர். அப்போது அவர்களை எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும் எம்.பி.க்கள் விவசாயிகளை சந்திப்பதில் உறுதியாக இருந்ததால், சாலையில் இருந்த ஆணி உள்ளிட்ட கம்பிகளை விவசாயிகளே தங்களிடமிருந்த பொருள் களைக் கொண்டு அகற்றினர். 

;