india

img

கொரோனா தடுப்பூசி  18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்....  

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் கோவின் இணைய தளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு வியாழனன்று  அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஏப்ரல் 24 சனிக்கிழமையன்று முதல் கோவின் இணைய தளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

;