india

img

சமூக விலகலைக் கடைப்பிடிக்காத கொரோனா நோயாளி 406 பேருக்குத் தொற்றைப் பரப்புவார்.... மத்திய அரசு எச்சரிக்கை....

புதுதில்லி:
ஒரு கொரோனா நோயாளிசமூக விலகல், தனிமைப் படுத்துதலை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருந்தால், 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா தொற்றைப் பரப்புவார் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலை உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலில் இருந்து காக்க அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும் என அறிவுறுத்தப் பட்டு வருகிறது. இருப்பினும் தொற்று நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:‘‘பல பல்கலைக்கழகங் கள் கொரோனா நோயாளிகள் குறித்து நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு கொரோனா நோயாளி சமூக விலகல் நடவடிக்கையைப் பின்பற்றாவிட்டால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவக்கூடும். 

அதேசமயம், கொரோனா நோயாளி சமூக விலகலையும், தடுப்பு விதிகளையும் 50சதவீதம் வரை கடைப்பிடித் தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். சமூகவிலகல் விதிகளையும், கொரோனா கட்டுப்பாடுகளையும் தீவிரமாகக் கடைப்பிடித்தால், அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 2 அல்லது 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் 6 அடி இடைவெளி விட்டு நின்று பேசினால் கூட தொற்றுக்கு ஆளாகாதவர் பாதிக் கப்படக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. இதுவே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா நோயாளிகள், முறையாக முகக் கவசத்தை அணியாவிட்டால், அவர்களிடம் இருந்து 90 சதவீதம் பாதிக்கப்படாத நபர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

தொற்றால் பாதிக்கப்படாத ஒருவர் முகக் கவசம் அணிந்து, முகக் கவசம் அணியாத கொரோனா நோயாளியுடன் பேசினால், 30 சதவீதம் தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபருக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. அதேசமயம், தொற்றுக்கு ஆளானநபரும், தொற்றால் பாதிக் கப்படாத நபரும் முகக் கவசம் அணிந்திருந்து பேசினால்,1.5 சதவீதம் மட்டுமே தொற் றால் பாதிக்கப்படாத அந்த நபர் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது’’.இவ்வாறு லாவ் அகர் வால் தெரிவித்தார்.

;