india

img

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு: மே 15-இல் உச்சநீதிமன்றம் விசாரணை!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு வருகிற மே 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ர்சைகளுக்கு இடையே கடந்த வாரம் வெளியானது. மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக படம் அமைந்துள்ளதாக பலதரப்பட்ட மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் படத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

மதச்சார்பின்மையை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினையை தூண்டும் விதமாக தி கேரளா ஸ்டோரி அமைந்துள்ளதாகவும், சங்-பரிவாரங்களின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் மனுவை ஏற்க மறுத்து கேரள உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.

கேரள உயர்நீதிமன்றம் திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்று வருகிற மே 15-ஆம் தேதி விசாரிக்க பட்டியலிட்டுள்ளது.