india

img

இந்த மாத இறுதிக்குள் 3 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும்.... இந்திய தூதர் தகவல்....

புதுதில்லி:
மே மாத இறுதிக்குள் 3 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறுமாநிலங்களில் கொரோனா  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து  ரஷ்யாவில் இருந்து ஸ் புட்னிக்  தடுப்பூசிகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ஏற்கனவே முதல் தொகுப்பு வந்தடைந்துள்ள நிலையில்,  இரண்டாவது தொகுப்பாக மேலும், 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கடந்த வாரம்  ஐதராபாத் வந்தடைந்துள்ளன. இதுவரை மொத்தம்,  1லட்சத்து 50ஆயிரம்  டோஸ் மற்றும் 60 ஆயிரம் டோஸ் இந்தியாவுக்கு வழங்கப்படுகின்றன.இந்த நிலையில், மே மாத இறுதிக்குள் சுமார் 3 மில்லியன் டோஸ் மொத்தமாக வழங்கப்பட இருப்பதாகவும், அதன்மூலம் இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி 5 மில்லியன் டோசாக அதிகரிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  850 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகள் இறுதியாக இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 85 கோடி டோஸ் ஸ்புட்னிக் வி உற்பத்தி செய்யப்படும் .இதுஉலகெங்கும்  தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசியில் கிட்டத்தட்ட 65-70 சதவீதம் இந்தியாவில் தயாராகும் என்றும்  ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி.பாலா வெங்கடேஷ் வெர்மா தெரிவித்துள்ளார்.

;