தில்லியில் கொரோனா விதிகளை மீறியதாக ஒரே நாளில் ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 1,700 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கடைகளில் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
அதனைக் கடைபிடிக்காத நிறுவனம், தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தில்லியில் ஜனவரி 2ம் தேதி மட்டும் ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது
மேலும், கொரோனா விதிமுறைகளை மீறிய 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று ஜனவரி 1ம் தேதி ரூ.99 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.