india

இந்தியாவில் புதிதாக 605 பேருக்கு கோவிட் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 605 பேருக்கு கோவிட் தொற்று பதிவாகியுள்ள நிலையில், 4 உயிரிழப்புடன், கோவிட் தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4002 ஆக உள்ளது.

கேரளாவில் 2 பேர், கர்நாடகா மற்றும் திரிபுராவில் தலா 1 என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,33,392 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,44,81,341 ஆக உயர்ந்துள்ளது.

விமான நிலையத்தில் 15,24,266 பயணிகளுக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 4,50,18,739 கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 93,58,79,495 பேருக்கு கோவிட் சோதனை சோதனை செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதார இணையத்தில் தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கர்நாடகாவில் 199 பேர், அதைத் தொடர்ந்து கேரளாவில் 148 பேர், மகாராஷ்டிராவில் 139, கோவாவில் 47 பேர், குஜராத்தில் 36 பேர், ஆந்திரா பிரதேசத்தில் 26 பேர், ராஜஸ்தானில் 30 பேர், தமிழ்நாட்டில் 26 பேர், தில்லியில் 21 பேர், ஒடிசாவில் 3 பேர், தெலுங்கானாவில் 2 பேர் மற்றும் ஹரியானாவில் 1நபர் என 12 மாநிலங்களில் மொத்தம் 682 பேருக்கு JN.1 வகை தொற்றுக்கான பாதிப்புகள் ஜனவரி 6-ஆம் தேதி வரை பதிவாகியுள்ளன.  

;