india

img

தேர்தல் முறைகேடுகளுக்காக கைமாறிய பணம்.... பாஜக மீது புகார் கொடுத்த ஆர்எஸ்எஸ் தர்மராஜன்..

திருச்சூர்:
கேரள மாநிலம் கொடகரயில் தேர்தல் முறைகேடுகளுக்காக கொண்டு செல் லப்பட்ட பணம் கொள்ளை போனதாக கூறப்படும் விவகாரம், பாஜக - ஆர்எஸ்எஸ் மாநில தலைமைக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

பணத்தைப் பறிகொடுத் ததாக நாடகமாடி புகார் அளித்ததர்மராஜன் ஆர்எஸ்எஸ் ஊழியர் என்று காவல்துறை அதிகாரி பூங்குழலி தெரிவித்துள்ளார். புகாரில் தெரிவித்ததை விட அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.இந்த பணத்தை, பாஜக-வின் இளைஞர் பிரிவான ‘யுவ மோர்ச்சா’ தலைவர் சுனில் நாயக் வழங்கியதாக தர்மராஜன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்அடிப்படையில் ‘யுவமோர்ச்சா’வின் முன்னாள்பொருளாளர் சுனில் நாயக் கிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தர்மராஜன், தான் சிறு வயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் சாகாவில் (பயிற்சி) பங்கேற்று வருவதாக கூறினார். தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜக மீண்டும் மீண் டும் கூறிவரும் நிலையில் தர்மராஜனின் ஆர்எஸ்எஸ் தொடர்பு அம்பலமாகி உள் ளது.

;