வயநாடு நிலச்சரிவிற்கு குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியிருப்பது, பேரிடருக்கு இரையான மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வயநாடு பேரிடரை அரசியல் சுயநலத்திற்காக சிலர் பயன்படுத்துவது துரதிஷ்டவசமானது. மக்களுக்கு யதார்த்தத்தை புரியவைக்க வேண்டியவர்களே இப்படி செய்வது வேதனைக்குரிய விஷயம். ஒன்றிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவின் கருத்து அதில் ஒன்றாகிவிட்டது.
அரசு ஒத்துழைப்போடு நடக்கும் சட்டவிரோத குடியிருப்பும், நில ஆக்கிரமிப்பும்தான் நிலச்சரிவிற்கு காரணம் என ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பது, பேரிடருக்கு இரையான மக்களை அவமானப் படுத்துவதற்கு சமம். உயிரை விட்ட மக்களை இந்த ரீதியில் அவமானப்படுத்தக்கூடாது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மக்களை "குடியேற்றக்காரர்கள்" என்று கூறி ஒதுக்கும் பிரச்சாரத்திற்கு, பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர் துணைபோவது நியாயமற்றது” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கண்டனத்தை தெரிவித்தார்.