கேரளத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை (மே 3) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கேரளத்தில் திங்களன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் பிறை தென்படாததால், மாநிலத்தில் செவ்வாயன்று ஈத் பண்டிகை கொண்டாடப்படும் என இஸ்லாமிய மதகுருமார்கள் ஞாயிறன்று அறிவித்தனர். இதனால், செவ்வாயன்றும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, செவ்வாயன்று நடைபெறவிருந்த அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும், மறுநாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.