india

img

பொதுவேலை நிறுத்தம்: கேரளாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

 

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் முழு வேலை நிறுத்த  போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.

அதன்படி, கேரளாவில் நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. கேரளா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
இந்த முழு அடைப்பு போராட்டத்தை யொட்டி, கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களில் நடக்க இருந்த தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.