குஜராத்,நவம்பர்.18- குஜராத் மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமையால் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் தார்பூரில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை 15 இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். 3 மணி நேரம் நிற்க வைத்து ராகிங் செய்ததில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ராகிங்கில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் 15 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.