india

img

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினாவுக்கு 3 கோடி பரிசு -  குஜராத் அரசு அறிவிப்பு  

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் படேல் குஜராத் அரசு ரூ. 3 கோடி பரிசு அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

பாரா ஒலிம்பிக் போட்டியின் 4வது நாளான இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் பவினாபென் படேல்,  உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை எதிர்கொண்டு 3-0 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாவுக்கு குஜராத் அரசு ரூ. 3 கோடி பரிசு அறிவித்துள்ளது. குஜராத் அரசின் திவ்யாங் கேல் விருது திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி பரிசு பாவினாவுக்கு வழங்கப்படும் என விஜய்ரூபானி அறிவித்துள்ளார்.

;